மட்டக்களப்பு ம்புறுமூலை பிரதேசத்தில் பஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் பலி (படங்கள் இணைப்பு)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கும்புறுமூலை பிரதேசத்தில் இடம் பெற்ற பஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பகுதியில் இருந்து கிண்ணயடி பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றவரும் மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்;ந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கிண்ணயடி நாகம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த பொன்னையா ஜெயராஜ் (வயது – 34) இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிர் இழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து சம்பவம் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment