மதவாச்சி ஹிக்கிரிகொலாவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, எதிர் திசையில் பயணித்த கொள்கலன் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது முற்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் றம்பாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.