மன்னாரில் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வீட்டு காணியில் உள்ள வேம்பு ஒன்றில் இருந்து தொடர்ச்சியாக பால் வடிகின்ற சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இம்மரத்தின் தண்டுப் பகுதியின் பல இடங்களில் இருந்தும் கடந்த 05 தினங்களுக்கு முன்னர் பால் வடிய ஆரம்பித்தது. இப்போது மரத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொடர்ச்சியாக அதிகளவான பால் வடிகின்றது.
மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றமையோடு போத்தல்களை வைத்து பாலை எடுத்துச் செல்லுகின்றனர்.