மரணவீட்டுக்குச் சென்று திரும்பியர்வர்கள் பயணித்த கார் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் குறித்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டிப்பர் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற மரண வீடொன்று சென்றுவிட்டு குருநாகல் நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காரில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.