டொரண்டோவில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணிபுரியும் 63 வயது பெண் ஒருவருக்கு லாட்டரியில் $50 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.
கடந்த அன்னையர் தினத்தில் டொரண்டோவை சேர்ந்த 63 வயது Sophie Rizavas அவர்கள் தனது இரண்டு மகள்களுடன் ஜாலியாக ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அந்த லாட்டரிக்கு நேற்று $50 மில்லியன் பரிசு விழுந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்தவுடன் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளார் Sophie Rizavas அவர்கள்.
44 வருடங்களுக்கு முன்னர் கிரீஸ் நாட்டில் இருந்து கனடாவிற்கு வந்ததாகவும், தனது இரண்டு மகள்களுடன் வாழும் தனக்கு கிடைத்த இந்த லாட்டரி பரிசு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளதாகவும் கூறினார்.
தற்போது மருத்துவமனையை சுத்தப்படுத்தும் தொழில்புரியும் Sophie Rizavas, தனது வேலையை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், தனது மகள்களின் சிறந்த எதிர்காலத்தை இப்பொழுது முதல் திட்டமிட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
$50 மில்லியன் பரிசுகள் கிடைத்தாலும் தான் ஆடம்பர வாழ்க்கை வாழப்போவதில்லை என்றும், தான் தற்போது பயன்படுத்தும் வீடு மற்றும் கார் போன்றவற்றைதான் இனியும் பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.