கடந்த ஆட்சியில் மஹிந்தவும் மஹிந்தவின் குடும்பத்தினரும் அவரது சகாக்களும் கோடிக்கணக்கான ரூபா பணத்தைக் கொள்ளையடித்தனர் என்றும் அந்தப் பணம் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்தப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.இவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பில் 36 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 86 கோப்புகள் மீதான விசாரணைகளில் 40 கோப்புகள் மீதான விசாரணைகள் முடிவுற்று அதன் பெறுபேறுகள் இலங்கை அரசுக்கு வரத் தொடங்கியுள்ளன என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் துபாய் வங்கியில் மஹிந்தவினதும் அவரது மகன் நாமலினதும் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.
மஹிந்தவின் கணக்கில் இருக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாவாம்.கேட்கும்போது தலையே சுற்றுகிறது.இது உண்மை என்றால் மஹிந்த சர்வதேச அளவில் 49ஆவது பணக்காரராம்.
அப்போ இன்னும் சிறிது காலம் ஆட்சியில் இருந்திருந்தால் பிள்கேட்ஸை முந்தி இருப்பார்போல.
மத்திய வங்கி ஊழலில் வசமாக மாட்டி தப்பிக்க வழியில்லாமல் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததை நாம் அறிவோம்.ஆனால்,இந்த ஆட்சியில் ரவி புரிந்த ஊழலில் ஒரு வீதம்தானாம் மத்திய வங்கி ஊழல்.
இதை விடவும் பாரதூரமான ஊழல்கள் பற்றிய தகவல்கள் மஹிந்த அணியின் கைகளில் உள்ளதாம்.ரவி அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்பதற்கு முற்படும்போது அந்த ஊழல்கள் வெளியே கொண்டு வரப்பட்டும் என்று மஹிந்த அணி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக,1000 கோடி ரூபா பிராடோ வாகன வரி ஊழல் மற்றும் 650 கோடி ரூபா வாகன ஊழல் போன்ற பல ஊழல்களில் ரவி ஈடுபட்டிருந்தார் என்றும் விரைவில் அவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தால் எல்லாக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் தப்பிடலாம் என்று நினைத்துத்தான் அந்த மனுஷன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்.இருந்தாலும் மஹிந்தவின் ஆட்கள் ரவியை சும்மா விடமாட்டாங்க போலும்.
பாவம் ரவியைப் பிடித்துள்ள சனி இப்போது விட்டதுபோல.