விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்கு உற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொஸ்லாந்த பகுதி பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனொருவனே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவன் மறுநாள் பாடசாலைக்கு செல்ல மறுத்த மாணவனை அவரின் பெற்றோர் வினவிய போதே மாணவன் இது குறித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் கொஸ்லாந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை
04-03-2013
தனது மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறைத் தண்டனையும் ஐந்து இலட்சம் ரூபா நஷ்ட ஈடும், 5000 ருபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் விசேட நீதிமன்றில் தனது இளம் வயது மகளை பாலியல் வல்லுறபுரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த நீதிபதி கேமா சுவர்ணாதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
சிறுமிக்கு ஐந்து இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கும் படியும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் மேலும் இரண்டு வருட சிறைத் தண்டனையை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் விதிக்கப்பட்ட ஐயாயிரம் ரூபா அபராதத்தை செலுத்தாத பட்சத்தில் மேலுமொரு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டு மெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.