மாலத்தீவு: சுற்றுலாப் பயணிகளுக்காக தயாராகும் பிரமாண்டமான மிதக்கும் ஆடம்பர பங்களாக்கள். மாலத்தீவு: சுற்றுலாப்பயணிகளுக்காக தயாராகும் பிரமாண்டமான மிதக்கும் ஆடம்பர பங்களாக்கள்.
எதிர்வரும் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மிதக்கும் வீடுகளை வடிவமைக்க மாலத்தீவை சேர்ந்த நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
முற்றிலும் சோலார் சக்தியால் இயக்கப்படும் இந்த மிதக்கும் பங்களாக்கள் குளம், ஆறு, கடல் போன்றவற்றில் பயன்படுத்தலாம். இந்த பங்களாவில் இருந்து கொண்டு தண்ணீருக்கு அடியில் உள்ளவற்றையும் பார்க்கும் வசதி அமைக்கப்படுகிறது.
மிகவும் ஆடம்பரமான வசதிகளுடன் தயார் செய்ய திட்டமிட்டுள்ளதாக MPD Designs என்ற நிறுவனத்தின் தலைவர் Michele Puzzolante அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். ஆனால் இந்த மிதக்கும் பங்களாக்களை உருவாக்க ரூ.1500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பங்களாக்களில் ஆடம்பரமான இரண்டு படுக்கையறைகள், சூரியக்குளியலுக்கு தேவையான இடம், நீச்சல் குளம், தண்ணிரில் அடியில் இருப்பவற்றை பார்க்கக்கூடிய வசதி, போன்ற இன்னும் பல வசதிகள் செய்யப்பட உள்ளன.
இந்த பங்களாக்களை ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகள் போன்றும் பயன்படுத்தலாம். பிரமாண்டமான ஹோட்டல்களில் பார், ரெஸ்டாரெண்ட், மினி விமான நிலையம், ஹெலிபேட் மற்றும் நீருக்கடியில் பார் மற்றும் இரவு கிளப் போன்றவற்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பங்களாக்கள் எப்பொழுது தயார் ஆகும் என்பது குறித்த தகவல்களை MPD Designs நிறுவனம் தெரிவிக்கவில்லை.