முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தைப் பார்த்து ஜனாதிபதி கெட் அவுட் ‘வெளியே போ’ என்று சொல்லியும் வெட்கமில்லாமல் கூனிக் குறுகி அந்தக் கதிரையிலேயே இருக்கின்றதொரு தலைமைத்துவத்தையே நாம் காண்கின்றோம் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மீராணியா வீதியில் நேற்று (02) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் தலைமைத்துவம் ஒரு தன்மானம் உள்ளதொரு தலைமைத்துவமாக இருந்தது. அந்த தலைமைத்துவத்தை கண்டால் அன்று இருந்த ஜனாதிபதியோ, பிரதமரோ மிகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டனர். அவரைக் கண்டால் எழும்பி மரியாதை கொடுப்பார்கள்.
ஆனால் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் செல்லாக் காசாக மாறிவிட்டது.
கடந்த காலங்களில் கொழும்பு வாழ் மக்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்து மாரநகரசபைக்கும், மாகாணசபைக்கும் பிரதிநிதிகளை அனுப்பினீர்கள். ஆனால் என்ன நடந்தது.
அவர்கள் இந்த மக்களது பிரச்சினைகளை எங்காவது பேசீனார்களா? ஆனால் நாங்கள் உங்களது பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்போம். புதுக்கடையில் எத்தனை ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளனர்.
ஆனால் மன்னாரில் கல்முனை போன்ற பிரதேசங்களில் 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளனர். ஆகவே உங்கள் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை தெரிவுசெய்து இந்தப் பகுதிகளது பிரச்சினைகளை பேசுவதற்கு தயார்படுத்துங்கள்.