ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் இலக்குகளை அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் நேற்று முதல்முறையாக பிரித்தானிய இராணுவம் இந்த தாக்குதலில் கலந்துகொண்டது.
பிரித்தானியாவைச் சேர்ந்த விமானப்படை, போராளிகளின் இலக்குகளை நோக்கி நேற்று சக்திவாய்ந்த குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பல இலக்குகள் தரைமட்டமாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றான.
பிரித்தானிய இராணுவத்தின் ஆர்.ஏ.எப். என்ற ஜெட் நேற்று ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளை நோக்கி பயங்கரமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களை பிரித்தானிய இராணுவத்தினர் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் மைக்கள் போலன் இந்த தாக்குதலை உறுதி செய்தார். முதல்கட்டமாக ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் நிலைகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக இந்த தாக்குதல் சிரியாவின் மீதும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளை ஒழிப்பதில் அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உள்ளதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளின் அச்சுறுத்தலை உலகில் இருந்து ஒழிப்பதே பிரித்தானியாவின் கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Video of ISIS terrorists passing the Turkish border to attack Kurds in Kobane
The railroad and tunnel shown in the pictures are located on the Turkish border side to Syria. ISIS terrorists have apparently the permission of Turkish authorities to use their border and conduct attacks on Kurds in Kobane. Eyewitnesses reported that the terrorists had been brought there before by a train