கம்பஹா, மதுருவிட பகுதியில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் ஒருவரை சீதுவ, கொடுகொடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் அறையிலிருந்து அப் பிரதேச மக்கள் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த பெண்ணின் முன்னாள் காதலரே அப் பெண்னை கடத்தி அறையினுள் அடைத்து வைத்திருந்ததாகவும் மேலும் கடத்தப்பட்ட அரை மணி நேரத்திற்குள் கடத்தல் காரர்களை தாக்கி அந்த இளம் பெண்னை பிரதேச மக்கள் மீட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மக்கள் தாக்கியதால் காயமடைந்த நிலையில் அப் பெண்ணின் முன்னாள் காதலன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.