போபால்: முன்னாள் பாஜக எம்.பி. நீத்தா பட்டேரியாவின் சேலை முந்தானையில் கையை துடைத்துவிட்டு கேட்டதற்கு ஜோக் என்று மத்திய பிரதேச மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. தினேஷ் ராய் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. தினேஷ் ராய். அவர் விவசாயிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில விவசாய மேம்பாட்டுத் துறை அமைச்சர் கவுரிசங்கர், முன்னாள் எம்.பி. நீத்தா பட்டேரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேடையில் நீத்தா நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் வந்த தினேஷ் அவரின் முந்தானையில் கையை துடைத்தது கேமராவில் பதிவானது. தனது முந்தானையில் கையை துடைத்த தினேஷை நீத்தா விளாசித் தள்ளியதோடு இது குறித்து பாஜக தலைமையிடம் புகார் தெரிவித்தார்
இது குறித்து நீத்தா கூறுகையில்,
எம்.எல்.ஏ. கண்ணியத்தோடு நடந்திருக்க வேண்டும். அவரின் செயல் எனக்கு சற்றும் பிடிக்கவில்லை. அவர் என்னை அண்ணி என்று அழைக்கலாம். ஆனால் அவர் தனது நிலையை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார்.
தினேஷ் கூறுகையில்,
இது எனக்கும், பட்டேரியாவுக்கும் இடையேயான ஜோக். அவர் என் அண்ணி. வேறு எங்கு போய் நான் கையை துடைப்பேன். அவர் பல பொருட்களை என்னை பிடித்திருக்க வைத்தார்.
அதனால் நான் உங்கள் புடவையில் கையை துடைப்பேன் என்று அவரிடம் ஜாலிக்காக கூறினேன். என் கை சுத்தமாகத் தான் இருந்தது. சும்மா தான் அப்படி செய்தேன். நான் அவரை தொடவில்லை என்றார்.