தமிழ் – சிங்கள புத்தாண்டையொட்டி யாழ்.மாவட்ட செயலகம், யாழ் மாவட்ட படைகளின் தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது
இன்று காலை 7. 00 மணிக்க ஆரம்பமான மரதனோட்டம், சைக்கிள் ஓட்டப் போட்டிகள் மற்றும் தமிழர்களின் பாரம் பரியம் மிக்க பல விளையாட்டு போட்டிகளில் தமிழ், சிங்கள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை இந்த விளையாட்டு போட்டிகள் மற்றும் இசைநிகழ்ச்சிகள் இன்று இரவு 11.00 மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி உதயபெரேரா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.