கிளிநொச்சி வட்டக்கச்சி மத்தியகல்லூரியில் அமைக்கப் பெற்ற மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைத்தார்.
மகிந்த சிந்தனையின் ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் ஆயிரம் இரண்டாம் நிலைப்பாடசாலைகளை மீளுருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளி.வட்டக்கச்சி மத்தியகல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வு கூடம் மகிந்தராஜபக்ச அவர்களினால் நேற்று திறந்துவைக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது
இவ் ஆய்வு கூடத்திற்கான கட்டிடங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் என்பனவற்றுக்கான சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் செவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகையடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள். ஜனாதிபதி வழங்கி வைத்தார்
அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு சலுகையடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மேற்படி நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இதில் வடமாகாணத்திலுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மக்களுக்கான அவர்களது சேவைகளை இலகுபடுத்தும் பொருட்டு இம் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக ஒருதொகுதியினருக்கு ஜனாதிபதி அவர்கள் இம் மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த ஆண், பெண் வெளிக்கள உத்தியோகத்தர்கள் 4558 பேருக்கு இன்றைய தினம் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
வடமாகாணத்திலுள்ள வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஏழு சாலைகளுக்குமான புதிய பேருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டன.