யாழில் மாணவிகளின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது

யாழ். நகரப்பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன.
அவை தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்திய யாழ்ப்பாணம் பொலிஸார் நல்லூர் பின் வீதியில் உள்ள இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் திருட்டுப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நகரப்பகுதியில் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவர் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளை திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment