யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை பகல் 02.00 மணியளவில் புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
புத்தூர் வடக்கு – புத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கஜிபன் (வயது 21) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் மறைவாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த இடத்தில் இருந்து இளைஞர் குதித்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சென்று பார்த்த போது, இளைஞரின் உடல் இரண்டாக பிரிந்தும், மூளைகள் சிதறிய நிலையிலும் சடலமாக கிடந்துள்ளார். புகையிரத ஊழியர்கள் நாவற்குழி புகையிரத்தில் சடலத்தினை ஒப்படைத்துள்ளார்கள்.
விசாரணையின் பின்னர் சடலத்தினை யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.