யாழ்ப்பாணம் காரைநகர் – ஊரி பிரதேசத்தில் 11 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறுமி நேற்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
துஷ்பிரயோக்ததிற்கு உள்ளானதாக கூறப்படும் 11 வயது சிறுமி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சிறுமி நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது ஆரம்ப கட்ட பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
பதின்ம வயதிலுள்ள இந்த சிறுமி வைத்தியசாலையின் 11ஆவது வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடற்படையினரால், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரியவிடம் நாம் வினவியபோது, தமக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சில கடற்படை உறுப்பினர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தமக்கு அறிவித்ததாகவும் மேலதிக விபரங்கள் எதுவும் தமக்கு தெரியாது எனவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
மயிலிட்டி முகாமில் ஆணின் சடலம் மீட்பு
யாழ்., பருத்தித்துறை, சுப்பர்மடம் (மயிலிட்டி முகாம்) பகுதியிலிருந்து 40 வயதுடைய ஆணொருவரின் சடலமொன்று இன்று புதன்கிழமை (16) காலை மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, ஆழியவளை, தாளையடியினைச் சேர்ந்த பாலசிங்கம் சதாசிவம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்தாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், சுப்பர்மடம் பகுதியிலேயே தங்கியுள்ளனர். இதனால், இவ்விடம் மயிலிட்டி முகாம் என்றும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.