ராஜீவ் ராஜேந்திரன் மரணம் குறித்து தவறான தகவல்கள்; ஆஸி. தூதரகம் விளக்கம்
பப்புவா நியூகினியின் மனுஸ் தீவில் அண்மையில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் பூதவுடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம் பணம் கோரியதாக ஊடகங்களில் எழுந்த தகவல்களை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்திருக்கிறது.
உண்மைக்குப் புறம்பான செய்தி என இதைக் குறிப்பிட்டிருக்கும் தூதரகம், இது பற்றிய விளக்கம் ஒன்றையும் விடுத்துள்ளது.
“மனுஸ் தீவில் மரணமடைந்த இலங்கைத் தமிழர் ராஜீவ் ராஜேந்திரனின் பூதவுடலை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக அவரது உறவினர்களிடம் பணம் கேட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
“ராஜீவின் பூதவுடலை இலங்கைக்குக் கொண்டுவர நிதியளித்து உதவுமாறு அவரது உறவினர்கள் அவுஸ்திரேலிய அரசையோ, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தையோ அணுகவில்லை.
“மேலும், ராஜீவ் பப்புவா நியூகினியில் மரணமடைந்ததால் அவரது உடலைத் திருப்பியனுப்புவது அந்நாட்டின் பொறுப்பாகும்.”
இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment