1991-1996 காலகட்டத்தில் செய்த செலவு: ரூ. 8.49 கோடி
இந்த காலகட்டத்தில் ஜெ., சசி, இளவரசி வாங்கிய சொத்துக்களின் மதிப்பு: ரூ. 55 கோடி. இவர்களது செலவுகளையும் கணக்கில் சேர்த்தால் சொத்தின் அளவு மொத்தம் ரூ. 63.5 கோடி
கேள்வி: வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இவ்வளவு சொத்தும் பணமும் எங்கிருந்து வந்தது?
சசிகலாவின் வருமானங்கள் மூலமாக இந்தப் பணம் வந்திருக்கலாமே என்று வாதாடக் கூட முடியாது. காரணம், ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா வாழ ஆரம்பிப்பற்கு முன் அவரது சொத்து விவரங்கள் இவை தான்.
பெயர்: சசிகலா
தொழில்: ஏதும் இல்லை. அரசுத்துறையில் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த கணவர் நடராஜனின் வருமானம் மட்டுமே
நடராஜனின் தந்தை சாமிநாதன் மன்னையார் மற்றும் சித்தப்பா பழனிவேல் ஆகியோருக்கு சேர்த்தே 24 ஏக்கர் நிலம் தான் இருந்தது. நடராஜனின் தாயார் லீலாவதி பெயரில் 3.5 ஏக்கர் நிலம் இருந்தது.
ஆக, நடராஜன் தந்தை-தயாருக்கு என சொந்தமாக இருந்தது 17.5 ஏக்கர் நிலம் மட்டுமே.இந்த நிலம் நடராஜனுக்கு மட்டும் சொந்தம் அல்ல. உடன் பிறந்தவர்களுக்கும் பங்கு இருந்தது. இதன்மூலம் நடராஜனுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை என்பது நிரூபணமாகிறது.
சசிகலாவின் தந்தை விவேகானந்தன் ஒரு நாட்டு வைத்தியர். அவருக்கும் 9 பங்காளிகளுக்கும் சேர்த்து இருந்த மொத்த நிலமே வெறும் 81 சென்ட் மட்டுமே.
இந்த சொத்தில் சசிகலா, வனிதா மற்றும் 6 சகோதரர்களுக்கு பங்கு இருந்தது. இதனால் சசிகலாவுக்கும் பூர்வீகச் சொத்துகள் என சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. மேலும் சசிகலா வருமான வரி கூட கட்ட வேண்டிய நிலையில் கூட இருந்தது இல்லை.
ஜெயலலிதாவுடன் வசிக்க ஆரம்பித்த பிறகே அவரது வருமானம் கிடுகிடுவென அதிகரித்து வருமான வரி கட்டவே ஆரம்பித்தார். அப்படி என்றால் இளவரசி மூலமாக கிடைத்த வருமானத்தில் ரூ. 53.60 கோடி சொத்துக்களை வாங்கியிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது.
காரணம், இளவரசியின் பொருளாதார நிலைமை இருந்த நிலை அப்படி..
பெயர்: இளவரசி
தொழில்: ஏதும் இல்லை
வருமானம், முந்தைய சொத்து மதிப்பு: இவரது கணவர் ஜெயராமன் உணவு வழங்கல் துறையில் வேலை பார்த்த கிளார்க். வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க இளவரசி தாக்கல் செய்த வருமான சான்றிதழில் கூறியுள்ளபடி ஆண்டு வருமானமே ரூ. 48,000 தான்.
அதாவது, மாத வருமானம் ரூ. 4,000 மட்டும் தான். (ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியானவர் ஜெயராமன் என்பது குறிப்பிடத்தக்கது) சரிப்பா, அப்படீன்னா சுதாகரன் என்ற மாபெரும் மனிதர் இருக்கிறாரே.
அவரது வருமானம் மூலம் சொத்துக்களை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் வாங்கியிருப்பார்கள் என்று வண்டு முருகன் வக்கீல் கூட வாதாட முடியாது. காரணம்,
அதன் விவரம் இதோ
சரி, இந்தப் பணம் எப்படித்தான் வந்திருக்க வேண்டும்?
ரோடு காண்ட்ராக்ட், தொழிற்சாலைக்கு அனுமதி, அரசு ஊழியர் டிரான்ஸ்பர், அரசு பஸ்களுக்கு டயர் வாங்குவதில் கமிஷன், பத்திரப் பதிவுத்துறையில் இருந்து தினமும் இவ்வளவு வர வேண்டும் என துறைவாரியாக பல வகைககளிலும் லஞ்சம் வசூலிக்க முடியும்.
அரசின் சார்பில் கக்கூஸ் கட்டுவதில் இருந்து செத்தவரை எரிக்கும் மின்சார மயானம் வரை எல்லா வகைகளிலும் எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்க பல பல வழிகள் கையாளப்படுகின்றன. (உதாரணத்துக்கு ரோடு காண்ட்ராக்டில் எப்போதுமே 35 சதவீதம் கமிஷனாகவே போய்விடும்.
அது எந்த ஆட்சியாக இருந்தாலும். ரூ. 10 கோடி மதிப்பில் போட வேண்டிய சாலைக்கு ரூ. 3.5 கோடியை அமைச்சருக்கும் கவுன்சிலர்களுக்கும் ஊராட்சி, நகராட்சி அதிகாரிகளுக்கும் கிளார்க், பியூன்களுக்கும் லோக்கல் கட்சிக்காரர்களுக்கும் லஞ்சமாக தந்துவிட்ட காண்ட்ராக்டர் மிச்சமிருக்கும் ரூ. 6.5 கோடியில் தான் ரோடே போடுவார்.
இவர்களுக்கு தேனை அள்ளித் தந்துவிட்டு காண்ட்ராக்டர் புறங் கையையா நக்க முடியும்?. அவர் ரோடு போட வேண்டிய பொருள்களின் தரத்தில் கையை வைப்பார். இதனால் தான் ரோடு போட்டுவிட்டு ரோடு ரோலர் போகும்போதே அதன் சக்கரத்திலேயே பாதி ரோடும் சேர்ந்து ஒட்டிக் கொண்டு போய்விடுகிறது)
துறைவாரியாக அமைச்சர்கள் தினந்தோறும் இவ்வளவு தர வேண்டும், வாரம் இவ்வளவு தர வேண்டும், மாதம் இவ்வளவு தர வேண்டும், இத்தனை கோடி திட்ட ஒப்புதலுக்கு இவ்வளவு பர்சன்ட் கமிஷன் வாங்கித் தர வேண்டும் என டார்கெட் வைத்தோ மற்றும் நேரடியாகவோ தான் இந்தப் பணத்தை இவர்கள் வசூலித்திருக்க வேண்டும்.
லஞ்சத்தை செக்கிலோ, டிடியாகவோ வாங்க முடியாதே. இதனால் பெரும்பாலும் பணமாகவோ, நகைகளாகவோ, அசையும்- அசையா சொத்துக்களாகவோ வந்திருக்க வேண்டும்.
பணமாக வந்ததை வெள்ளையாக்க வேண்டுமே.. அதற்காகவே உருவாக்கப்பட்டன டுபாக்கூர் நிறுவனங்கள். அவை இதோ…
viii. M/s.Super Duper TV (P) Ltd.,
ix. M/s.Anjaneya Printers Pvt. Ltd.,
x. M/s.Ramraj Agro Mills Ltd.,
xi. M/s.Signora Business Enterprises Pvt., Ltd.,