அரபு வசந்தம் என்னும் பெயரில் நேட்டோப்படைகள் குண்டு மாரி பொழிய கேணல் மும்மர் கடாஃபியின் ஆட்சி லிபியாவில் கவிழ்க்கப்பட்டு நீதிக்குப் புறம்பான வகையில் கடாஃபியும் கொல்லப்பட்டார். உலகிலேயே சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகளு டன் கடாஃபி ஆட்சி செய்த லிபியா இப் போது பிளவுபடும் நிலையை அடைந்துள்ளது.
பல இனக் குழுமங்கள், பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. பலவீனமான லிபிய மைய அரசுக்கு எதிராக எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களின் மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
லிபிய வரலாற்றில் முதன் முறையாக மக்களாட்சி முறைமைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் அலி ஜெய்டன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார்.
மொத்தத்தில் லிபியாவில் அரபு வசந் தம் அரபு இலை உதிர்காலமாக மாறிவிட்டது. லிபிய அரமைப்புச் சபைக்கான தேர்தலில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலான உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது நடந்த வன்முறைகள் இதற்குக் காரணமாகும்.
பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாசார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும்.
இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியா வில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது. இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன.
மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக்குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம்.
அல் – மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது. இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியா வில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.
கடாஃபியின் மனைவி வார்ஃ ப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியாவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.
கடாஃபியின் தேச ஒருமைப்பாடு
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடையே மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால், இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடையே ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொலையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.
மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் உள்ளனர். அவ ர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார் கள்.
ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறியப்பட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்த்தனர்.
கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி.
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இஸ்லாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே.
சவூதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்லாமிய விடு தலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது.
இவை இரண்டும் ஷியா முஸ்லிம்களின் அமைப்பாகும். ஆனால், அல்கைதா ஒரு ஸுன்னி முஸ்லிம்களின் அமைப்பாகும். அல் கைய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானூடாகவே வருகிறது.
இதற்காக அல் கைய்தா ஈரானில் எந்தவித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கைய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது.
மொஹமட் முர்ஸியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கைய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கைய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கைய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான்.
ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பியா ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்சி பெற்ற அல் கைதாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்றுறை கண்டறிந்துள்ளது. 2011ஆ-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நைஜீரியாவில் ஈரானில் தயாரான படைக்கலன்களை அல் கைதாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட் டது.
யெமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கைய்தா பாவிப்பது கண்டறியப்பட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.
பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது.
லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர்.
சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செல்வந்த நாடுகளில் ஒன்றாக ஆகிவிடுவதுடன், எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றவும்.
சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும்படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணெயை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரசு சைரெ னைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகை யைச் செய்துள்ளது.
லிபியா பிளவுபடாமல் தடுக்கவும் லிபியாவில் அமைதியை நிலைநாட்டவும் லிபியாவின் பொதுத் தேசிய சபை பெரும் முயற்சி எடுக்கின்றது.
அது இடைக்காலத் தலைமை அமைச் சரான அப்துல்லா அலி தின்னியை நியமித்துள்ளது. அவரது பதவிக் காலம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை நீடிக்கப் படுகின்றது.
லிபியா பிளவு படாமல் தடுக்கக் கூடியதாகவும், படைக் கலன்கள் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொலைகள் செய்வதைத் தடுக்கக் கூடிய தாகவும் ஓர் அமைச்சரவையை அவர் உருவாக்க வேண்டும் எனப் பணிக் கப்பட்டுள்ளார். இரண்டாவது மருமகன் வந்தால் தான் மூத்த மருமகனின் அருமை தெரியும்.
– வேல் தர்மா
Moammar Gadhafi relaxes with his family at the Bab al-Aziziya compound in Tripoli in this still image taken from an exclusive amateur video from 2005 obtained by Reuters on September 7, 2011
Moammar Gadhafi with his daughter Ayesha in his Bedouin tent January 12, 1986. The Libyan leader presented his family to U.S. women journalists he invited to a news conference in the tent.
Safiya Gadhafi , wife of the Libyan leader Col. Muammar Gaddafi, with her children inside their Bedouin tent January 12, 1986.R
Muammar Gadhafi, inside his Bedouin tent 1986 where he presented his family to U.S. women journalists during a news conference.Reuters
Safia Gadhafi, wife of Libyan leader Moammar Gadhafi, meets foreign journalists in front of her house at Bab El Azazia barracks in Tripoli April 21, 1986. She is now demanding an inquiry into her husband’s death.
Libyan leader Muammar Gaddafi’s daughter Aisha Muammar Gadhafi , Pakistani Prime Minister Yousuf Raza Gilani’s wife Fauzia Gilani, Syrian President Bashar Assad’s wife Asma Assad, Qatar Amir Sheik Hamad bin Khalifa al-Thani’s wife Sheikha Mozah bint Nasser Al Missned, Turkey’s Prime Minister Tayyip Erdogan’s wife Emine Erdogan, Jordanian Queen Rania, Lebanese President Michel Suleiman’s wife Wafaa Suleyman and Vice Speaker of the Azerbaijani parliament Bahar Muradova pose for a family photo at the Istanbul Meeting in Support of Gaza in Istanbul January 10, 2009.Reuters