கமால் குணரட்ணவின் நந்திக்கடல் புத்தகம் எடுத்துக்காட்டு – யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர முன்வைக்கும் ஆதாரங்கள் இதோ!!
விமல் வீரவன்ச, கமால் குணரட்ண, சரத் வீரசேகர உள்ளிட்டோர் தெரிவித்திருக்கும் கருத்துக்களை பார்க்கும்போது அவர்கள் அதிகாரத்திலிருக்கும்போது எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.
62 இலட்சம் மக்களின் ஆணைக்கு அமைய புதிய அரசியலமைப்பை தயாரிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
அத்துடன் நந்திக்கடல் என கமல் குணரத்னஎழுதிய புத்தகத்தில் அவர்கள் வடக்கில் அப்பாவி பொது மக்கள் மீது எவ்வாறு தாக்குதல்களை ஏவி விட்டனர் என்பதையும் எவ்வாறு அவர்களின் சொத்துக்களை அபகரித்தனர் என்பதையும் விளக்கியிருக்கிறார்.
இவ்வாறான கடுமையான செயற்பாடுகளினால் எவ்வாறான வக்கிரத்தன்மையை பெற்றுக் கொண்டார் என்பதையும் அவர் விளக்கியிருக்கிறார்.
இது போன்ற விடயங்களே யுத்த குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துளள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்க்பபட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரண தண்டனை என்ற விடயத்தை முன்வைத்தே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு எந்தவிதமான சடங்கும் செய்யப்படக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு 63 இலட்சம் மக்கள் நிரந்தர சமாதானத்தையும் ஸ்திர தன்மையையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்காக புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என ஆணைவழங்கியுள்ள நிலையிலேயே அந்த இராணுவ அதிகாரி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன் அரசாங்கமும் மக்களின் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
தோற்க்கடிக்கப்பட்ட அதிகார தாகமுள்ள சக்திகள் ஜனநாயகத்தை மதிக்காத நிலையில் ஒரு வெறியுடன் செயற்படுவதை காண முடிகிறது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் காணப்டுகின்ற அங்கீகாரத்தை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இனவாத சக்திகள் இவ்வாறு உரையாற்றியமைக்கு நாம் பதிலளிப்பது பெறுமதியானதல்ல.
மாறாக ஜனநாயகத்தை மதிக்கின்ற பெரும்பாலான மக்களின் சார்பில் பேசுவதே சரியானது என உணர்கிறேன். ”வியத்மக” என்ற அமைப்பானது கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவே உருவாக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் கலாசாரத்தின் ஸ்தாபக தலைவரான கோத்தபாய ராஜபக்ஷவின் கடுமையான மிருகத்தனமான செயற்பாடுகள் தொடர்பான அவரது கனவு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையே தெரிகிறது.
கமல் குணரத்ன தான் அண்மையில் எழுதிய புத்தகத்தில் இலங்கை இராணுவத்தை காட்டிக் கொடுத்திருக்கிறார்.
”நந்திக்கடல்” என அவர் எழுதிய புத்தகத்தில் அவர் வடக்கில் அப்பாவி பொது மக்கள் மீது எவ்வாறு தாக்குதல்களை ஏவி விட்டனர் என்பதையும் எவ்வாறு அவர்களின் சொத்துக்களை அபகரித்தனர் என்பதையும் விளக்கியிருக்கிறார்.
இவ்வாறான கடுமையான செயற்பாடுகளினால் எவ்வாறான வக்கிரத்தன்மையை பெற்றுக் கொண்டார் என்பதையும் அவர் விளக்கியருக்கிறார்.
இது போன்ற விடயங்களே யுத்த குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
மேலும் அவர் இராஜதந்திர சேவையிலிருந்தபோது இலங்கையர் ஒருவர் மரணமாகியமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
சரத் வீரசேகர என்பவரும் கோத்தாபாயவின் சொல் பேச்சு கேட்பவராகவே இருக்கிறார். அவரும் அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் கூறியிருக்கிறார்.
அடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 1988, 1989 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்து பேசியிருக்கிறார்.
அதாவது பாராளுமன்றம் மீது குண்டு வைக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். அவரின் மைத்துனரே கடந்த காலத்தில் பாராளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டார்.
அந்த யுகத்தை மீண்டும் விமல் வீரவன்ச அழைத்திருக்கின்றார். அதன்மூலம் தான் மிருகத்தனமான அரசியலை கொண்டவர் என வெ ளிக்காட்டியிருக்கிறார்.
அதிகாரத்தில் இல்லாதபோது அவர்களினால் இவ்வாறான கோரமான கருத்துக்களை முன்வைக்க முடியுமானால் அதிகாரத்திலிருக்கும்போது எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த கூற்றுக்கள் ஜனநாயத்தை விரும்பும் மற்றும் புதிய அரசியலமைப்பை ஆதரிக்கும் மக்களை ஆபத்தில் போட்டிருக்கிறது.
அவர்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லா விட்டாலும் இரத்த தாகமுடைய கொலைகாரர்களாகவே செயற்படுவோம் என்பதை அவர்கள் எமக்கு நினைவுப் படுத்தியிருக்கின்றனர்.
இந்த நாட்டு மக்கள் ராஜபக்ஷ யுகத்தை இன்னும் மறந்துவிடவில்லை. சிவிலியன்களை கடத்தியமை, இரகசிய கொலை கார கும்பல் பயன்படுத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் வெ ள்ளை வேனில் கடத்தப்பட்டமை என்பதை மக்கள் மறக்கவில்லை.
இவ்வாறான நிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக 62 இலட்சம் மக்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஆணை வழங்கியிருக்கின்றனர்.
கடந்த கால இரக்கமற்ற தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதுடன் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சர்வாதிகார தலைமைத்துவம் தொடர்பாக இன்னும் அச்சம் கொண்டுள்ளனர்.
எனவே அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.
இரத்த தாகமுடைய இரக்கமற்ற சக்திகளை தோற்கடிக்க நாம் அனைத்து முற்போக்கு மற்றும் சமாதானத்தை விரும்பும் மக்களுடன் இணைந்து செயற்பட தயாராகவிருக்கின்றோம்.