வடமாகாணத்தில் மன்னாருக்கு என்ன இடமிருக்கு? எண்டொரு கேள்வியைப்Mannar town போட்டார் மன்னார் வாசி ஒருத்தர்.
போன கிழமை மன்னாருக்கு நான் போனபோதே இந்தப் பொல்லாத கேள்வி வந்தது?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் நான் திணறிப்போனன்.
சத்தியமாக உங்களில ஆருக்காவது இந்தக் கேள்விக்கான பதில் தெரிஞ்சால்இ அதை ஒருக்கால் தயவு செய்து எனக்கும் சொல்லுங்கோ!
‘வடமாகாணத்தில் மன்னாருக்கு என்ன இடமிருக்கு?’
‘மன்னாரைப் பற்றி எந்தப் பேப்பர்காரனாவது எழுதிறானா?’
‘எந்த அரசியல்வாதிகளாவது மன்னாருக்கு வந்து எதையாவது செய்ய வேணும் எண்டு யோசிக்கிறாங்களா?’
‘மன்னார் இப்ப எப்பிடி இருக்கெண்டு ஆருக்காவது தெரியுமா?
அல்லது அதைப்பற்றி அறியிறதில ஆருக்கேனும் அக்கறையிருக்கா?’
‘அமைச்சர் றிஷாத்துக்கும் ஆயருக்கும் இடைக்கிடை நடக்கிற அதிகாரப் போட்டியில ஏதாவது செய்திகள் வந்தால் சரி.
மற்றும்படி இங்கே கழுதை தேய்கிறதே தவிர உருப்படியான கதை ஏதும் நடக்கிறதாக இல்லை’ என்றெல்லாம் பொரிந்து தள்ளினார் நண்பர்.
இந்த நண்பருடைய ஆதங்கம் மிகச் சரியெண்டே எனக்கும் படுகிது.
மன்னாரைப்பற்றி ஆரும் கவலைப்படுகிறமாதிரி இல்லை.
தேர்தல் காலங்களில் தமிழ்ப் பற்றும் பாசமும் பொங்க அரசியல்வாதிகள் மன்னாரில் கானல் தெருக்களில் கால்நடையாக நடந்து மன்னாரை அளப்பார்கள்.
மன்னாருக்கு பொன்னான எதிர்காலம் வரப்போகிறது. அதைத் தங்கத்தட்டில் கொண்டு வந்து தரப்போகிறோம் எண்டெல்லாம் புளுகித்தள்ளுவார்கள்.
அந்த நாட்களில் வண்ணக்கொடிகள் வானில் பறக்கும்.
மன்னாரில் முழங்கும் இந்தத் தேர்தல் தமிழோசையில் மயங்கிக் கிறங்கிப் போகிற சனங்கள் அப்பிடியே போய் வீட்டுச் சின்னத்துக்கு நேரே புள்ளடியைக் கீறிப்போட்டு வந்து விடுவார்கள்.
பிறகு?
மன்னார்ப்பக்கம் எந்தப் பயலும் திரும்பியே பார்க்க மாட்டார்கள்.
ஆயர் இராயப்பு யோசேப்பு மட்டும் இருந்தால் போல ஒரு தடவை இருமுவார். அல்லது தும்முவார்.
மற்றும்படி மன்னாரில் எதுவுமே நடப்பதில்லை.
ஒதுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்ட ஒரு பகுதியாகவே மன்னார் புறக்கணிக்கப்பட்டிருக்கும்.
இது ஏன் எண்டதே மன்னார் வாசிகளின் கவலையும் கேள்விகளும்.
ஆனால் இந்தக் கவலையை எந்தத் தமிழர்களும் கவனத்தில் எடுப்பதில்லை.
தமிழ்கூறும் நல்லுலகம் இதைப்பற்றி என்றும் சிந்திப்பதும் இல்லை.
இந்த ஒதுக்கல் – ஓரவஞ்சனை தனியே மன்னாருக்கு மட்டும் என்றில்லை.
மன்னாரைப்போல இன்னும் சில பிரதேசங்கள் இப்பிடித்தான்
காலதிகாலமாக ஒதுக்கப்பட்டும் ஒரங்கட்டப்பட்டும் வருகின்றன.
இதற்கெல்லாம் பதில் எவரிடமும் கிடையாது.
இதைப்பற்றி எவரும் பொதுவெளியில் உரையாடுவதோ கவனப்படுத்துவதோ இல்லை.
ஆனால். தமிழ்த்தேசிய அரசியலில் இந்தக் குறைபாடுகள் அத்தனையும் மறைக்கப்பட்டு விடும்.
இதைப்பற்றி ஆராவது பேசினால். அது பிரதேச வாதம் எண்டு சொல்லி அப்படியே தமிழ்த்துரோகச்சிந்தனையைப் பரப்பாதீர்கள் எண்டு ஆணி அடித்து விடுவார்கள்.
மன்னாருக்கு நீங்கள் வந்து பார்த்தால் தெரியும் இங்கே மீனவர்களின் பிரச்சினைகளில் இருந்து போதை வஸ்துப் பிரச்சினைகள் வரையில் ஏராளமான சிக்கல்கள்
இடியப்பச்சிக்கல்களாக உருவாகிக் கொண்டேயிருக்கின்றன எண்டதை அறியலாம்.
இதுக்கெல்லாம் வடக்கு மாகாணசபையோ தமிழ்த்தேசிய அரசியலோ தீர்வைத் தரப்போவதில்லை.
இந்த நிலையில் அரச தரப்பம் ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதாக இல்லை.
எனவே மன்னார் அபாயத்தில் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அருமையான பாடத்தையே நாங்கள் படிக்கவில்லையெண்டால் எங்களை கடவுளாலேயே காப்பாற்ற முடியாது. – வடபுலத்தான்
12-09-2014
சில மாதங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்துக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் ஐயா வந்திருந்தவரல்லோ.
கமரூன் ஐயாவின்ர யாழ்ப்பாண விஜயத்தை வைச்சு ஒரு பெரிய பிளிம் காட்டிச்சினம் தமிழ் பேப்பர்க்காரர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்களும்.
வந்தார் கமரூன், இருந்தார் கமரூன், படுத்தார் கமரூன், சிரித்தார் கமரூன், சாப்பிட்டார் கமரூன், மூச்சுவிட்டார் கமரூன், ஒண்டுக்கு இருந்தார் கமரூன், தும்மினார் கமரூன், வந்த தும்மலை அடக்கினார் கமரூன் இப்படியே ஒரு ரெண்டு மாசம் கமரூன் புராணம்தான்.
இந்தப் புராணத்தை படிக்க படிக்க தமிழ்ச் சனங்களுக்கும் குண்டியில தட்டின புளுகம்.
கமரூன் என்றால் சும்மாவா. வெள்ளக்காரத் துரையல்லோ. அதுவும் பிரித்தானியப் பிரதமரல்லோ.
இந்த வெள்ளக்காரத் துரையோட ஒரு தேத்தண்ணி குடிச்சு, நாலு வார்த்தை பேசி, படத்தையும் எடுத்து அரசியல் திருவிழாவை படுசோக்காக நடத்திச்சுது கூட்டமைப்பு.
அந்த நாளில வந்த பேப்பரில படிச்சவ ஒரு தடவை இப்ப அதையெல்லாம் நினைச்சுப் பாக்க வேணும்.
கமரூன் திருவிழா பத்துநாள் தாக்குப்பிடிக்கேல. அப்படியே புஷ்வானமாகிப் போச்சு.
இப்ப அதைப்போல இன்னொரு திருவிழா தொடங்கியிருக்கு
இது மோடி திருவிழா.
மோடி கூப்பிட்டார், மோடி தேத்தண்ணி தந்தார், மோடி சப்பாத்தியும் சாம்பாறும் கலந்து ஒரு பந்தி வைச்சார் இப்படியே மோடி திருவிழாவுக்கும் ஏகப்பட்ட அலங்காரங்கள்.
ஐயோ தாங்க முடியலட சாமி.
ஆனால், எப்படியோ காலத்திற்கு காலம் இந்தமாதிரிவாற திருவிழாக்கலால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்ர ஓட்ட வண்டியும் ஓடிக்கொண்டிருக்கு.
அரசியல் வியாபாரிகள் பழைய பாயாசத்தையும் புதுசா குடுக்கத்தான் பாப்பினம்
ஆனால், சனங்களாகிய நாங்கள்தான் எல்லாத்திலையும் விழிப்பாக இருக்க வேணும்.
இல்லையெண்டால் எங்களுடைய தலைகள்தான் பழுதாகும்.
ஒட்டோடி ஒட்டோடி கேள்வியில்லாமல், விமர்சனங்களில்லாமல் துதிபாடி துதிபாடி முள்ளிவாய்க்காலில போய் நிண்டனாங்கள்.
இந்த அருமையான பாடத்தையே நாங்கள் படிக்கவில்லையெண்டால் எங்களை கடவுளாலேயே காப்பாற்ற முடியாது.