மூன்று நாள் விஜயமாக இத்தாலி மற்றும் வத்திக்கானுக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது பாரியார் சகிதம் இன்று புனித பாப்பரசரை சந்தித்துள்ளார்.
இன்று இத்தாலியில் இருந்து வத்திக்கான் சென்ற மஹிந்த பாப்பரசரின் இலங்கை வருகைக்கான உத்தியோகபூர்வ அழைப்பை கையளித்த பின் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வத்திக்கான் அரச செயலாளர் கர்தினால் பீ. பெரோலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய இலங்கை செய்திகள்
மேற்படி பேச்சுவார்த்தையில் இலங்கையில் சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் இதுவரை பல கத்தோலிக்க குருமார்கள் படுகொலை செய்யப்பட்டும் ஆயுதப்படையினரால் கடத்தியும், காணாமல் செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே அது தொடர்பான விசாரணைகள் பற்றி மஹிந்தவிடம் கேள்வி எதுவும் எழுப்பட்டதா என எத்தகவலும் வெளியாகவில்லை.