கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் வசிக்கும் 27 வயதுள்ள பெண் ஆசிரியர் , 17 வயது சிறுவன் மீது ஏற்பட்ட காதலால் கணவனை விட்டு பிரிந்துள்ளார்.
2 குழந்தைகளுக்கு தாயாரான பெண் திடீரென மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக விசாரணையில் இறங்கிய பொலீசார், அவர்கள் இருவரும் மதுரையில் தங்கியிருப்பதை கண்டு பிடித்து, ஆரல்வாய் மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் கணவர், நடந்ததை மறந்து விட்டு ஒன்றாக வாழலாம் என கெஞ்சினார். ஆனால், அந்த பெண்ணோ, நான் சிறுவனுடன் தான் வாழ்வேன் என உறுதியாக கூறியுள்ளார். அதே போல அந்த சிறுவனும் கூறியுள்ளான்.
ஆனால், திருமணம் செய்ய 21 வயது நிரம்பியிருக்க வேண்டும் என ஆலோசனை கூறி சிறுவனை பெற்றோருடன் பொலீசார் அனுப்பி வைத்தனர்.
அதேபோல், கணவருடன் செல்ல மறுத்த அப்பெண்ணை குழந்தைகளுடன், அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.00:20 23.09.2017