வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று உணவுப் பொருட்களை திருடிவரும் பெண்களின் செயற்பாடுகள் சி. சி. ரி.வி. கமெரா உதவியுடன் அம்பலத்திற்கு வந்துள்ளது.
வவுனியா மத்திய பேருந்து நிலையங்களிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் ஒருசில பெண்கள் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கோருவதும், உரிமையாளர் தண்ணீர் எடுக்கச் சென்ற சமயங்களில் வர்த்தக நிலையங்களிலுள்ள பொருட்களை திருடிய சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது.
இதுபோன்று பல வர்த்தக நிலையங்களில் உணவுப் பண்டங்களை திருடும் பெண்களைக் கண்டால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருந்து கொள்ளுமாறும் இவ்வாறான பெண்கள் சமூகத்தில் உலாவருவதுடன் இவ்வாறானவர்களை வர்த்தக நிலையங்களுக்குள் எடுக்கவேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.