ஆந்திர மாநிலத்தில் ஐதராபாத் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் செங்கல் சுள்ளையில் கொத்தடிமையாக வேலைபார்த்த சிலர் தப்பிக்க முயன்ற குற்றத்திற்காக வலது கையின் ஒரு பகுதியை வெட்டி கொடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த தகவல் தற்போதுதான் தெரியவந்துள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் இன்னும் அடிமைத்தனம் மட்டும் ஒழியவில்லை என்பதற்கு அவ்வப்போது ஒருசில எடுத்துக்காட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
ஐதராபாத்தின் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் உள்ள செங்கல்சுள்ளையில் ஒரிசாவில் இருந்து பிழைக்க வந்த ஒரு கும்பல் வேலைபார்த்து வந்தது.
மிகவும் கடினமான வேலையாக இருந்ததாலும், கூலி சரியாக கிடைக்காததாலும், அங்கிருந்து 12 பேர் கொண்ட ஒரு குழு தப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களுள் மூன்று பேர் செங்கல்சுள்ளை முதலாளியிடம் பிடிபட்டனர்.
பிடிபட்ட மூன்று பேர்களிடமும் செங்கல்சுள்ளை முதலாளி, “ஒரு கை, ஒரு கால் அல்லது உயிர் மூன்றில் எதை இழக்க விரும்புகிறாய் என்று கேட்டுள்ளார். மூவரும் கைகளை இழப்பதாக ஒப்புக்கொண்டவுடன் கோடாரியால் மூவரின் வலது கையையும் வெட்டி குப்பையில் எறிந்துள்ளார் அந்த ஈவு இரக்கமற்ற செங்கல்சுள்ளை முதலாளி.
ஒரு கையை இழந்த துக்கத்தோடு மீண்டும் ஒரிஸ்ஸா வந்து பிழைப்பதற்கும் வழியில்லாமல் இருப்பதாக தற்போது வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த ஒரிஸ்ஸாவில் உள்ள சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் ஆந்திர, ஒரிஸ்ஸா எல்லைப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
அண்ணன் செய்த தவறுக்கு 14 வயது தங்கைக்கு கற்பழிப்பு தண்டனை. ஊர்த்தலைவர் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்ணன் செய்த தவறுக்காக அவருடைய தங்கைக்கு பாலியல் பலாத்கார தண்டனை கொடுத்து அதிர்ச்சி தீர்ப்பு வழங்கிய கிராமத்தலைவர் உள்பட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள போக்கோரா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஊர்த்தலைவர் ஒருவரின் மனைவியிடம் ஒரு வாலிபர் தவறாக நடந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊர்த்தலைவர் அந்த வாலிபரின் 14 வயது தங்கையை இரண்டு பேர் கற்பழிக்குமாறு தண்டனை கொடுத்தார்.
14 வயது சிறுமியின் பெற்றோர் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டுக்கொண்டும் ஊர்த்தலைவர் செவி சாய்க்கவில்லை. ஊருக்கு வெளியே உள்ள காட்டுக்கு 14 வயது சிறுமியை இரண்டு பேர் தூக்கி சென்று கற்பழிப்பு தண்டனையை கொடுத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர்களிடம் சிறுமியின் பெற்றோர் புகார் செய்ததால் போலீஸார் விரைந்து வந்து கிராமத்தின் ஊர்த்தலைவர், கற்பழித்த இரண்டு பேர் மற்றும் ஊர்த்தலைவரின் மனைவியிடம் தவறாக நடந்துகொண்ட சிறுமியின் அண்ணன் ஆகிய நான்குபேர்களையும் கைது செய்தனர்.
போக்கோரா மாவட்ட காவல்துறை அதிகாரி ஜிதேந்திர சிங் இதுகுறித்து கூறியதாவது, “இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் ஊர்த்தலைவர்கள் தங்களை நீதிபதியாக நினைத்துக்கொண்டு அவர்களே கடுமையான தண்டனை கொடுக்கின்றனர். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்துக்கள் நடந்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.