சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
சமீபத்தில் சென்னையில் நடந்த பிலிம்பேர் விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு நடனமும் ஆடினார். அப்போது அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அவரது இடது கையில் காயம் இருந்ததை கவனித்து, வளைத்து வளைத்து அவரது கை தெரியும்படியான புகைப்படங்களை அதிகமாக எடுத்துள்ளனர்.
ஸ்ருதிஹாசனின் காயம் யாரோ ஒருவர் கடித்தது போல் உள்ளதாகவும், ஆண் நண்பர் ஒருவரால் ஏற்பட்ட காதல் பிரச்சினையால் ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
ஆனால் ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து, டான்ஸ் பிராக்டீஸ் செய்யும்போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம்தான் இது என்றும், இதுகுறித்து யாரும் கற்பனையான செய்தி பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் சமூக இணையதளத்தில் ஒருவர் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஒருவரால்தான் இந்த காயம் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதே இணையதளத்தில் இன்னும் ஒருசிலர் பூஜை படப்பிடிப்பின்போது அந்த படத்தின் ஹீரோவால் ஏற்பட்ட காயம் என்று கூறியுள்ளனர். ஸ்ருதிஹாசனின் சிறுகாயம் ஊடகங்களில் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை.
முதல்ல ஆர்யா, சிம்பு, விஷாலை பண்ண சொல்லுங்க! ஜெய் காட்டம்
24-07-2014
முதல்ல ஆர்யா, சிம்பு, விஷாலை பண்ண சொல்லுங்க. அதற்கு பிறகு என்கிட்ட வந்து இந்த கேள்வியை கேளுங்க என்றார் ஜெய்.
எதனால் அவர் அப்படி சொன்னார்?
இதோ அவரது பேட்டி: நடிப்பு மட்டும் எனக்கு போதும் என நான் நினைக்கவில்லை. அதனால்தான் கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறேன்.
இது எனது குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு இதில் இருந்த ஆர்வத்தை பார்த்து அவர்கள் ஒப்புக்கொண்டனர். நஸ்ரியாவுடன் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படம் வௌியாகியுள்ளது.
இந்த படம் தாமதம் ஆனதற்கு பல காரணங்கள் உண்டு. சில சம்பிரதாய விழாக்களை நிஜத்தில் படமாக்க விரும்பினோம். அதற்காக அனுமதி பெற்று காத்திருந்தோம். அந்த விழாக்கள் நடந்தபோது அதை படம் பிடித்தோம்.
அதனால் படம் தாமதமானது. எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறீர்கள். இந்த கேள்வியை முதலில் சிம்பு, ஆர்யா, விஷாலிடம் கேளுங்கள். அவர்கள் முதலில் திருமணம் செய்யட்டும். அதற்கு பிறகு நான் செய்கிறேன்.
இன்னும் நான் சின்ன பையன்தான். திருமணத்துக்கான நேரம் வரும்போது செய்துகொள்வேன். இவ்வாறு ஜெய் கூறினார்.
காதலன் நடிப்பை கண்டு ரசித்த காதலி
25-07-2014
இலியானாவின்காதலன் நடிகர் ஆனார். நண்பன், கேடி படங்களில் நடித்தவர் இலியானா.தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த இவர் தற்போது இந்தி படங்களில் நடித்துவருகிறார்.
கடந்த சில வருடமாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நிபோனுடன்நெருங்கிய நட்புடன் இருந்து வருகிறார். அடிக்கடி இருவரும் நட்சத்திரஓட்டலுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர். தற்போது ஹேப்பி என்டிங் என்ற இந்திபடத்தில் நடித்து வருகிறார் இலியானா.
இப்படத்தின் ஷூட்டிங் லாஸ் ஏஞ்சலஸில்நடந்து வருகிறது. அடிக்கடி இலியானாவை சந்திக்க ஆண்ட்ரு ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்து செல்கிறார்.
அங்கு பணிபுரிபவர்கள் மற்றும்டைரக்டரிடம் ஆண்ட்ரு சகஜமாக பழகினார். இது அவர்களை கவர்ந்தது. ஒருகாட்சியில் நடிக்க புதுமுக நடிகர் தேவைப்பட்டார். அதில் ஆண்ட்ருவை நடிக்கவைக்க முடிவு செய்தார் இயககுனர். இதுபற்றி அவரிடம் சொன்னதும் உடனே நடிக்கஒப்புககொண்டார் ஆண்ட்ரு.
பாத்திரத்துக்கு ஏற்ப நடித்து அனைவரிடமும்பாராட்டு பெற்றார். ஆண்ட்ருவுக்கு, இலியானா நடிப்பு பற்றி டிப்ஸ்கொடுத்தார். திடீர் நடிகர் ஆன காதலன் ஆண்ட்ருவின் நடிப்பை கண்டு இலியானாசிரித்தபடி இருந்தார்.