தனது கணவரான அதிபரை வெறுப்பேத்துவதற்காக அவருடைய கைத் தொலைபேசியில் இருந்து பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு ’ஹாய் செல்லம்” என எஸ்.எம்.எஸ் போட்டு பெரிய பிரளயததையே உருவாக்கியுள்ளாா் வலிகாமமத்தில் உள்ள பாடசாலையின் அதிபாின் மனைவி.
பாடசாலை அதிபா் வீட்டுக்கு தொடா்ந்து பிந்தி வருவதால் சந்தேகப்பட்ட மனைவி அவா் தவறுதலாக தனது கைத் தொலைபேசியை விட்டு விட்டு வெளியே சென்ற பின் அந்த தொலைபேசியை எடுத்து ஆராய்ந்துள்ளார்.
அப்போது அந்தத் தொலைபேசியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் அதிபரின் பிறந்த தினத்திற்கு புகைப்பட எஸ்.எம்.எஸ் போட்டிருந்த ஒரு நம்பருக்கு ‘ஹாய் செல்லம்‘ என அனுப்பியுள்ளார்.
அதற்கு ” என்ன சோ் இது” என பதில் வந்ததால் உடனடியாக அந்த எஸ்.எம்.எஸ் சை அழித்துவிட்டு பேசாது இருந்துவிட்டார்.
இதன் பின்னா் அடுத்தநாள் பாடசாலை போய் அதிபா் தனியே இருந்த போது மனைவி அனுப்பி எஸ்.எம்.எஸ் குரிய ஆசிரியை வந்து அதிபரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது அதிபா் அதிர்ந்துள்ளார்.
இதன் பின்னா் அதிபா் எஸ்.எம்.எஸ் வந்த நேரத்தைப் பார்த்து அறிந்து உடனடியான தொலைபேசி எடுத்து மனைவியைத் தொடா்பு கொண்ட போது மனைவி சிரித்தவாறு தான்தான் சும்மா அனுப்பியது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த புகைப்பட எஸ்.எம்.எஸ் வந்ததால்தான் தான் அனுப்பியாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அதிபா் கதைக்கும் போது கேட்டுக் கொண்டிருந்த ஆரிசியை அதன் பின்னா் நிம்மதியானதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழில்..கடனுக்கு கள் கொடுக்க மறுத்தவரின் கையை முறித்தவர் கைது.
13-11-2014
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையில் கடனுக்கு கள் கொடுக்க மறுத்த தவறணை பணியாளரின் கையை அடித்து முறித்தவரை புதன்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர்.
ஆவரங்கால் பகுதியிலுள்ள தவறணை ஒன்றில் கள் அருந்துவதற்காக நபர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி சென்றுள்ளார். முதல் இரண்டு குவளை கள்ளை பணம் கொடுத்து அருந்திய நபர், மூன்றாவது குவளை கள்ளை கடனுக்கு தரும்படி தவறணை பணியாளரை கேட்டுள்ளார்.
அதற்கு பணியாளர் மறுக்கவே, மேற்படி நபர் அருகிலிருந்த கட்டையை எடுத்து பணியாளரின் கையில் பலமாக அடித்துள்ளார்.
பணியாளரர், கை முறிந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேநகநபரை கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.