இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹீரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்க விமானி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.
உலக சரித்திர வரலாற்றில், இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாயி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அணுகுண்டு வீசிய சம்பவம் மறக்க முடியாத ஒரு துயர சம்பவம் ஆகும்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா என்ற நகரிலும், மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகசாயிலும், அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. இந்த சம்பவத்தில் மொத்தம் சுமார் 2 லட்சத்திற்கு அதிகமானோர் பலியாகினர். அதன்பின்னர் பல வருடங்களுக்கு அணுதாக்குதலின் வீரியம் இந்த இரண்டு நகரங்களில் இருந்தது.
ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசிய குழுவில் Theodore Van Kirk என்ற 24 வயது இராணுவ வீரர் ஒருவரும் இருந்தார். இவர் அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்தாலும், பிறப்பால் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனது உறவினர்களுடன் ஜார்ஜியாவில் தங்கியிருந்த Theodore Van Kirk நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93 ஆகும். தங்கள் நாட்டில் 2 லட்சம் உயிர்கள் அழிய காரணமாக இருந்த இவருடைய மரணத்தை ஜப்பான் மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
Theodore Van Kirk மறைவு குறித்து அவருடைய ஒரே மகன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” எனது தந்தையை அமெரிக்காவினர் உலகப்போரின் ‘ஹீரோ’ என்று போற்றுவார்கள் ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு நல்ல தந்தையாக எப்போதும் இருந்தார்.
அணுகுண்டு வீசியதை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு தனது செயல் உதவி புரிந்ததாகத்தான் அவர் கூறுவார்’’ என்றார். தனது தந்தையின் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான பென்சில்வேனியாவில் அடுத்த வாரம் நடைபெறும் என அவருடைய மகன் தெரிவித்தார்