வவுனியா நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதிரம்பிட்டி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக உள்ளே விழுந்திருக்கலாம் என நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் முதிரம்பிட்டி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் அலெக்சன் (வயது-7) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார். சடலம் நெடுங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வாரமும் வவுனியா கற்குளம் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.