பீஹாரில், இறந்துபோன சகோதரனின் மனைவியைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்ட பதினைந்து வயதுச் சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.
ரூபினா (25) என்பவரின் கணவர் கடையொன்றில் மின்சார வேலை செய்பவர். இவர், கடந்த 2013ஆம் ஆண்டு கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார். அதற்கு நட்ட ஈடாக கடை உரிமையாளர் 80 ஆயிரம் ரூபா கொடுத்தார். இங்கேதான் பிரச்சினை ஆரம்பமானது.
நட்ட ஈட்டுப் பணத்தை இறந்தவரின் தந்தை சந்திரேஸ்வர் மொத்தமாக எடுத்துக்கொண்டார். கடந்த நான்கு வருடங்களாக, ரூபினாவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் 27 ஆயிரம் ரூபாயை ரூபினாவின் கணக்கில் வைப்புச் செய்தார் சந்திரேஸ்வர்.
எனினும் மிகுதிப் பணமும் தன் மகளுக்கே சொந்தம் என ரூபினாவின் பெற்றோர் பிரச்சினை செய்தனர். நட்ட ஈட்டுப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வழிதெரியாத சந்திரேஸ்வருக்கு ஒரு யோசனை தோன்றியது.
அதன்படி, மிகுதிப் பணத்துக்குப் பதிலாக ரூபினாவுக்கு தனது இளைய மகனை பிரவேஷைத் திருமணம் செய்து வைக்க முயன்றார் சந்திரேஸ்வர். இதற்கு ரூபினாவின் பெற்றோரும் சம்மதித்தனர்.
கடுமையாக எதிர்த்தும் கடந்த புதனன்று ரூபினாவுக்கும் பிரவேஷுக்கும் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த இரண்டே மணித்தியாலங்களில் பிரவேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து சந்திரேஷ்வர், ரூபினாவின் பெற்றோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருமணமான அன்று நடந்தது என்ன? அண்ணியின் பரபரப்பு வாக்குமூலம்
பீகாரில் தனது அண்ணியை திருமணம் செய்து வைத்த காரணத்தால் மனமுடைந்த 15 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது அண்ணி பொலிசில் நடந்தவை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
Gaya மாவட்டத்தின் Paraiya கிராமத்தை சேர்ந்த மகாதேவ் தாஸ்(15) என்ற சிறுவன், தன்னை விட 10 வயது மூத்தவரான தனது அண்ணி ரூபி தேவியை தனக்கு திருமணம் செய்து வைத்த காரணத்தால், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து அண்ணி ரூபி தேவியிடம் விசாரணை நடத்தியதில், அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மகாதேவ் தாஸ்ஸின் மூத்த சகோதரன் சதிஷ் தாஸை எனக்கு திருமணம் செய்து வைத்தனர், அப்போது மகாதேவ்வின் வயது 9.
அவர்கள் வீட்டில் 3 ஆண் குழந்தைகள், இதில் மகாதேவ் தான் கடைசி பையன், மகாதேவ்க்கு முந்தைய சகோதரன் மனிஷ் தாஸ்க்கும் திருமணம் முடிந்துவிட்டது.
2013 ஆம் ஆண்டு சதிஷ் வேலை பார்த்த இடத்தில் மின்சாரம் தாக்கி இறந்துபோனார், இதனால் நான் எனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று, அங்கேயே வாழந்துவிடலாம் என முடிவு செய்தேன்.
ஆனால், எனது மாமனார் சந்தீஷ்வரர் தாஸ் இதற்கு அனுமதிக்கவில்லை, எங்களது வீட்டிலேயே வாழ வேண்டும் என்றும் மகாதேவ்க்கு 15 வயது ஆனவுடன் அவனை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என கூறினார்.
எனது குழந்தைகளுடன் சேர்த்து மகாதேவையும் ஒரு குழந்தையாகத்தான் வளர்த்து வந்தேன், இதற்கிடையில் மகாதேவ்க்கு 15 வயது நெருங்கியவுடன், என்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு மறுத்த அவன் மேற்கொண்டு தான் படிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறியுள்ளான்.
இதனை ஏற்க மறுத்த தந்தை, சொத்தினை பிரித்துக்கொடுக்க முடியாது என பிரச்சனை செய்துள்ளார், எனது தாயும் மகாதேவக்கு என்னை திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் தான் டிசம்பர் 11 ஆம் திகதி எங்கள் திருமணம் நடைபெற்றது, திருமணம் முடிந்த அன்று எனது சகோதரி மகாதேவிடம் பேசியுள்ளார், ஆனால் பதில் எதுவும் தெரிவிக்க மறுத்த மகாதேவ் தனது அறைக்குள் சென்றுவிட்டான்.
நான் எனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எனது அறைக்குள் சென்றுவிட்டேன், அவனது அறைக்குள் சென்ற அவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டான் என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
அண்ணியை திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுவன்: 2 மணி நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!