பதுரலிய – மோல்கா பகுதியில் உந்துருளியொன்று மோதுண்டதில் ஒன்ரை வயதான குழந்தையொன்று பலியாகியுள்ளது.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் அதே பகுதியை சேர்ந்த குழந்தையே பலியாகியுள்ளது.
குறித்த குழந்தை அயலவர் ஒருவருடன் வீதியை கடக்க முற்பட்ட போதே உந்துருளியில் மோதுண்டுள்ளது.
விபத்தின் பின்னர் உந்துருளி செலுத்துனர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தப்பிச் சென்றுள்ள உந்துருளி செலுத்துனரை தேடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பம் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.