சென்னை: தன்னை அதிர்ஷ்ட தேவதை என கூறியதால் ஆர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா.ராஜா ராணி படத்தில் நடித்தபோது நயன்தாரா-ஆர்யா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது.
இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இதற்கிடையில் இரண்டாம் உலகம் படத்தின்போது அனுஷ்காவுடனும் ஆர்யா நட்பாக பழக¤யதால் நயன்தாரா கோபம் அடைந்தார். இதனால் நயன்தாரா-
ஆர்யா இடையே விரிசல் ஏற்பட்டது. இப்போது இருவரும் விழாக்களிலோ வெளியிடங்களிலோ சந்தித்தால் பேசிக்கொள்வார்கள். ஆனால் இருவருக்கிடையே பழைய நட்பு இல்லை.
இந்நிலையில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தது எனது அதிர்ஷ்டம் என சமீபத்தில் கூறியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் அவர் நின்றுவிடவில்லை, நயன்தாரா எனது அதிர்ஷ்ட தேவதை என்றும் கூறியிருக்கிறார். இதனால் நயன்தாரா கோபம் அடைந்துள்ளாராம்.
நட்பே வேண்டாம் என்றுதான் ஒதுங்கி செல்கிறேன். அதிர்ஷ்ட தேவதை எனக்கூறி எங்களுக்குள் நெருக்கம் இருப் பது போல் காட்டிக் கொள்ளப்பார்க்கிறார்.
தேவையில்லாமல் இவராகவே மீடியாவுக்கு கிசு கிசு தீனி போடுகிறார் என தனக்கு நெருங்கியவர்களிடம் கூறி கோபப்பட்டாராம் நயன்தாரா.
நயன்தாரா நகம் வெட்டுவது பெரிய விஷயமா? ஹீரோயின்கள் கமென்ட்
10-03-2014
சென்னை: நயன்தாரா நகம் வெட்டிவிட்டு நடிப்பது பெரிய விஷயமா என்று ஹீரோயின்கள் நக்கலடித்துள்ளனர்.இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான கஹானி படம் தமிழ், தெலுங்கில் ‘நீ எங்கே என் அன்பே, ‘அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
கதைப்படி, மாயமான கணவரை தேடி வெளிநாட்டிலிருந்து ஹீரோயின் இந்தியாவுக்கு வருகிறார். ஆனால் நிஜத்தில் அவர் கணவர் மாயமாகவில்லை.
ஏற்கனவே தீவிரவாதி ஒருவரால் கொல்லப்பட்டார் என்பதும் அந்த தீவிரவாதியை கொல்லவே ஹீரோயின் நாடகமாடுகிறார் என்பதும் கிளைமாக்சில் தெரியும்.
இப்படத்துக்கு நயன்தாரா கொடுத்த ஒத்துழைப்பு பற்றி கூறும்போது இயக்குனர் சேகர் கம்முலா ஓவர் ஐஸ் வைத்து தள்ளுகிறாராம். நடிப்பில் வித்யா பாலனையே மிஞ்சி விட்டதாக சொன்னவர், ஆக்ஷன் காட்சியில் டூப் போடாமல் நடித்தார் என்பதில் தொடங்கி அவர் நகம் வெட்டியதுவரை பெரிய விஷயமாக சொல்கிறாராம்.
பெரும்பாலானா ஹீரோயின்கள் விரல் நகங்களை நீண்டதாக வளர்த்து அதை பராமரிப்பதற்காக தனி அக்கறை எடுத்துக்கொள்கின்றனர். நயன்தாராவும் தனது விரல் நகங்களை நீளமாக வளர்த்து பராமரித்து வந்தார்.
குறிப்பிட்ட ஒரு காட்சியை சேகர் கம்முலா படமாக்கும்போது நயன்தாராவின் நகம் இடையூறாக இருந்தது. அதை கவனித்த இயக்குனர், ‘இக்காட்சியில் நகங்கள் ரொம்பவும் அழகாக தெரியக்கூடாது.
நீங்கள் வழக்கம்போல் நடியுங்கள் நகம் தெரியாமல் நான் படமாக்கிக்கொள்கிறேன்’ என்றார். ஆனால் கேமரா முன் நின்ற நயன்தாரா, ‘இதோ வருகிறேன் என்று நகர்ந்தார். சில நிமிடங்கள் கழித்து வந்தவர் விரல் நகங்களை வெட்டி இருந்தார். அதன்பிறகு காட்சி படமானது.
இந்த விஷயத்தை இயக்குனர் யூனிட்டாரிடமும், மீடியாவிலும் பெரிதுபடுத்தி கூறினார். இதை அறிந்த சில ஹீரோயின்கள் நயன்தாரா நகம் வெட்டிக்கொண்டு நடித்தது பெரிய விஷயமா என்று நக்கலாக கேட்டு கமென்ட் அடித்துள்ளனர்.