திருமணமாகாத 40 வயதுடைய நபரொருவர் தனது அந்தரங்க உறுப்பை கட்டையொன்றின் மீது வைத்து கோடரியால் வெட்டியெறிந்த சம்பவம் ஒன்று சியம்பலாண்டுவ பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னர் மோசமான நிலையிலிருந்த குறித்த நபரைப் பார்த்த அயலவர்கள் அவர் வெட்டியெறிந்த அந்தரங்க உறுப்புடன் மொனராகலை வைத்தியசாலையில் அவரைச் சேர்த்துள்ளனர்.
தற்போது இந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.