அமெரிக்காவில் சாகச வாலிபர் பால் ரொசோலி அனகோண்டாவால் விழுங்கப்பட்ட காட்சி, பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என பன்முக திறமைகளை கொண்ட பால் ரொசோலி என்ற இளைஞர், அனகோண்டாவால் விழுங்கப்பட்டு ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த காட்சி, நேற்று முன் தினம் டிஸ்கவரி தொலைக்காட்சியின் ஈட்டன் அலைவ் (Eaten alive) நிகழ்ச்சியில் ஒளிபரப்பபட்டுள்ளது.
பரபரப்பாக வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டத்தில் ரொசோலி, ஒரு பெரிய அனகோண்டாவால் விழுங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நிகழ்ச்சியோ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தடிமனான பாதுகாப்பு உடை அணிந்திருந்த ரொசோலியின் உடலை அனகோண்டா சுற்றி வளைப்பதுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
ஆனால் அதன் பிறகு அனகோண்டாவுக்கும் அவருக்குமான போராட்டம், பாம்பின் வயிற்றிலிருந்து உயிருடன் மீண்டதோடு முடிந்துள்ளது.
இந்நிலையில் ரொசோலி களமிறங்கிய இந்த போராட்டத்தில், அவருக்கு கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓன்லைனில் சில பார்வையாளர்கள் கூறுகையில், தன் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதது இந்நிகழ்ச்சி என்றும் தங்களது எதிர்ப்பார்ப்பை ஏமாற்றிவிட்டது எனவும் ஏளனப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த விமர்சனங்களுக்கு கருத்து தெரிவிக்க டிஸ்கவரி தொலைக்காட்சி மறுத்துவிட்டது.
பாம்பு “இரும்பை” விழுங்குமா? மனிதனுக்குதான் வித்தியாசமான சிந்தனைகள் உதிர்க்கிறது.