அரசாங்கம் தரும் அற்ப சலுகைகளுக்காக “விலைபோய்…. நமது கொள்கைகளை விற்று” உங்கள் பொன்னான வாக்குகளை அரசாங்கத்திற்கு அளிக்கவேண்டாம். நீங்கள் உண்மையான தமிழர்கள் என்றால் உங்கள் வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே அளித்திடவேண்டும்.
(வடமாகான சபை அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் 70 இலச்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண அமைச்சா்கள், தங்களது செயலாளா்களைக் கொண்டு பெற்றுப் கொண்டுள்ளனர்.)
நாங்கள்… “தமிழர் தாயகம், தமிழ் தேசியம், தமிழர் சுயாட்சி, சுயநிர்ணயவுரிமை” போன்ற உன்னத கொள்கைகளுக்காக (மண்ணாங்கட்டி) சாகும்வரை போராடி சாவோமே ஒழிய அரசாங்கம் வீசும் எழும்பு துண்டுகளுக்கா அலையமாட்டோம்.
அடுத்தமுறையும் வடமாகாண சபை எங்கள் கைகளுக்கு கிடைக்குமானால் … எங்கள் தாயக மண்ணிலிருந்து உடனடியாக இரவோடு இரவாக இராணுவத்தினரை வெளியேற்றுவோம்.
கெட்டவர்கள் கையில் வடமாகான சபை கிடைக்குமானால்…. கெட்டதே நடக்கும். நல்லது நடக்கவேண்டுமென்றால் வடமாகான சபை திரும்பவும் எங்கள் கையில் கிடைக்கவேண்டும்.
எனவே… அடுத்து வரும் தேர்தலிலும் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அறுதிப்பெரும்பான்மையுடன், வடக்கில் எம்மை நாமே ஆளக்கூடிய தமிழ் அரசொன்றை நிறுவுவதற்கு ஆதரவளிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
(சலுகைகளுக்கு விலைபோகாமல் கொள்கை பற்றுடைய தமிழர்களான நீங்கள் அளிக்கும் வாக்குகளை பெற்று.. அதன் மூலம் நமக்கு கிடைக்கும் பதவிகளின் மூலம் தமிழ் மக்களாகிய உங்களுக்கு முடிந்தவரை சேவைசெய்வோம். எந்த காலத்திலும் நாம் சலுகைகளுக்காக அரசாங்கத்திட்ம விலைபோக மாட்டோம். இது சத்தியம்! இது சத்தியம்!
(அரசங்கத்தோடு பேச்சுவார்த்தைக்கு போகமாட்டோம். அரசங்கத்திடமிருந்து மக்களாகிய உங்களுக்கு எதையுமே வாங்கி தரமாட்டோம். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதைசெய்தாலும் எதிர்ப்போம், எதை தந்தாலும் வாங்கமாட்டோம். ஆனால்…. அரசாங்கம் நமக்கு (கூட்டபை்பினர்) தரும் அனைத்து சலுகைகளையும் பெற்று ராஜபோக வாழ்க்கை வாழ்வோம். இது தான் எங்கள் கொள்கை.)
(70 லட்சம் ரூபாய் பெறுமதியான வாகனங்களை எமக்களித்த… இந்த மாதிரி பெரும்தன்மையான ஆளுனர் தான் எப்பொழுதும் எங்களுக்கு வேண்டும். ஆளுனரை வெளியேற்றும்படி கூட்டமைபினராகிய நாங்கள் அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. ஆளுனரால் எங்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.
மாறாக… அரசாங்கம்தான் ஆளுனரை வெளியேற்ற விரும்பி வடமாகான சபையில் தீர்மானம் நிறைவேற்றும்படி எங்களிடம் கோரிககை முன்வைத்தது. இதையிட்டு ஊடகங்கள் தான் தவறாக பிரச்சாரம் செய்கின்றார்கள்.)
இந்த அமைச்சா்கள் பெற்றுக் கொண்ட இந்த வாகனங்கள் அமைச்சா்களால் தெரிவு செய்யப்பட்டு அதன் நிறம் என்ன, உள்ளே உள்ள சீற் என்ன வடிவத்தில் இருக்க வேண்டு்ம் என்பவற்றையெல்லாம் தெரிவு செய்து அரசிடம் கொடுத்தே இந்த வாகனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனா்.
அப்படிப் பெற்றுக் கொண்டாலும் கூட அதை நேரே போய் வாங்க வெக்கப்பட்டு , தமிழ்த் தேசியம் பாதிக்கப்படும் என்ற நல்ல எண்ணத்தோடு இவா்கள் தங்கள் செலாளா்களைக் கொண்டு வாங்கியுள்ளனா். இந்த் கேவலம் கெட்ட பிழைப்பு உங்களுக்குத் தேவையா அமைச்சா்களே!!
வடக்கு அமைச்சர்களுக்கு 45 மில்லியன் (4, 1/2கோடி) பெறுமதியான வாகனங்கள்
வடமாகாண அமைச்சர்களுக்காக புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் இன்று (05) வடமாகாண ஆளூனரினால் கையளிக்கப்பட்டன.
வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தில் இன்று காலை 10 அமைச்சர்களுக்கு உரிய வாகனங்களை அந்த அந்த அமைச்சின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அமைச்சர்கள் ஆனா ஐங்கரநேசன், குருகுலராசா மற்றும் டெனீஸ்வரன் ஆகியோருக்கான வாகனங்களும் சுகாதார அமைச்சுக்குமான வாகனமாக 5 வாகனங்கள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன.
வடமாகாண முதலமைச்சருக்கும் மற்றும் சுகாதார அமைச்சருக்குமான வாகனங்கள் தருவிக்கப்படுவதில் ஏற்பட்ட காலதமதத்தினால் அவை இன்றைய தினம் கையளிக்கப்படவில்லை எனவும் அவர்களுக்கான வாகனங்களும் மிக விரைவில் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், அவைத் தலைவர் ஆகியோருக்கு 45 மில்லியன் ரூபா செலவில் இவ் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனமும் ஏனைய 4 அமைச்சர்கள் மற்றும் அவைத் தலைவர் ஆகியோருக்கு தலா 7 மில்லியன் (70 இலச்சம்) ரூபாவுமாக மொத்தம் 45 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கம் கொடுக்கும் எழும்புத்துண்டுகளுக்காக நாம் எப்பொழுதுமே அலையமாட்டோம். எங்களுக்கு எழும்புகள் முழுமையாக சதையுடன் கிடைத்தால் அதைப்பெற்றுக்கொள்வோம்.