விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் கணக்குகள் தீர்ந்து போக, பாச கணக்குகளில் விரிசல் விழ தொடங்கியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல், நட்பையும் தாண்டி அப்பா – மகள் பாசம் அனைவராலும் விரும்பப்பட்டது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக நடந்த கலவரத்தில் இந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டது பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கஸ்தூரி வைல்ட் கார்ட், வனிதாவின் ரீ-எண்ட்ரி, அபிராமி-முகென் ஒருதலை காதல் பிரிவு, மதுமிதாவின் ஆண்/பெண் பாகுபாடு, தன்னை தானே காயப்படுத்திக் கொண்ட நிகழ்வு போன்றவற்றால் பிக் பாஸ் வீடே கடந்த ஒரு வாரமாக படு மோசமான நிலையில் இருந்தது.
இதன் காரணமாக சேரன், லாஸ்லியா இடையிலான அப்பா-மகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்நிலையில் சேரனை நாமினேஷன் செய்துள்ளார் லாஸ்லியா
மதுமிதா பிக் பாஸ் விதியை மீறியதால் வெளியேற்றப்பட்டார், அவரைத் தொடர்ந்து வாராவாரம் நாமினேட் செய்யப்பட்ட அபிராமி மக்களின் குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்.