கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.
அங்கு இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி அங்கு 95,979 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.
அமெரிக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு உயிரிழப்புகள் என்பதை புரிந்து கொள்ள இந்தக் காணொளியை பாருங்கள்.
- கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 52,10,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
- சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் சுமார் 20.5 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
- உலகெங்கும் 3 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 95ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்
- தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது
- கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயினை (HCQ) பயன்படுத்துவது குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.