அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் கணவனால் மனைவி தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், காரைதீவு 12ம் பிரிவு வெட்டுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மொறிஸ் மெரினா (31) எனும் இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு தீமூட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உயிரிழந்த குறித்த பெண், திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கடந்துள்ளதாகவும், கணவனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்குக காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவதினமான இன்று (05) அதிகாலை குறித்த பெண்ணின் கணவன் தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் கணவரான குகதாசன் (32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலை சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மமாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.