பொதுவாக எல்லோரும் என் மாங்கல்யம் நிலைக்க வேண்டும். என் தாலியை காப்பாற்று.
நான் பூவும் பொட்டுமாக இருக்க என் கணவனுக்கு நீண்ட ஆயுள் கொடு என கடவுளிடம் வேண்டி கொள்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
ஆனால் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் என் கணவனை கொன்று தன்னை விதவையாக்கு என்று அம்மனுக்கு வேண்டுதல் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று பனசங்கரி அம்மன் கோயில். இந்த கோயில் உண்டியலில் சேரும் பணம், நகைகளை கோயில் நிர்வாகத்தினர் எண்ணுவது வழக்கம்.
அப்படி உண்டியலை பணத்தை எடுத்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை படித்த உடனே கோயில் நிர்வாகத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் என் கணவரை கொன்று என்னை விதவையாக்கி விடு தாயே. என் கணவனின் கொட்டத்தை அடக்கி விடு.
நானும் என் மகனும் நிம்மதியாக இருக்க வேண்டும். என் கணவன் செத்தால் அதுபோதும் எனக்கு.
இதை மட்டும் நிறைவேற்றினால் உனக்கு என்ன நேர்த்திகடன் வேண்டுமானாலும் செய்கிறேன் என் நெஞ்சுருக கடிதம் எழுதி உள்ளார்.
இதனை கோயில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.