எனது கணவர் காணாமல் போகவில்லை நான்தான் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். மனிதநேயமுள்ள அரசாங்கமாகயிருந்தால் மனித நேயமுள்ளவர்களாக இராணு வத்தினர் இருந்தால் பொறுப்புடன் பெற்றுக்கொண்ட எனது கணவரை உயிருடன் திரு ப்பித் தர வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று சாட்சியமளித்தார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 – மே – 18 ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வடக்குக் கிழக்கில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் விசாரணைகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
இந்த விசாரணைக்கு சாட்சியமளிக்க வருகை தந்திருந்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
விசாரணையின் ஆரம்பத்தில் ஆணைக்குழுவினரால் யார் காணாமற்போயுள்ளார் என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதன்போது குறுக்கிட்ட குறித்த பெண் எனது கணவர் காணாமல் போகவில்லை அவரை இராணுவத்தினரிடம் நானே ஒப்படைத்தேன் என்றார்.
தொடர்ந்து சாட்சியமளித்த குறித்த பெண் எனது கணவரான வசந்தனை கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 17-ம் திகதி வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணு வத்தினரிடம் ஒப்படைத்திருந்தேன்.
அப்போது மதியம் 1.30 மணியிருக்கும் எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் போது அவருக்கு 35 வயது என்றார் ஜெயீனா என்ற இளம் குடும்பபெண்.
ஏன் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தீர்கள் என்று ஆணைக்குழுவினர் மறுபடியும்; கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அந்தப் பெண், போராளிகள் தாமாக முன் வந்து சரணடையுமாறு இராணுவத்தினர் பகிரங்கமாக ஒலி பெருக்கிகளில் அறிவித்துக் கொண்டு இருந்தனர். இதன் காரணமாக எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன் என்றார்.
இதன்போது உங்கள் கணவர் போராளியா என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்ப ஆம் என்று பதிலளித்தார் அந்தப் பெண்.
அதேவேளை 5 வருடங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தார். பின்னர் அவர்களிடமிருந்து பிரிந்து வந்து எம்முடம் சேர்ந்து விட்டார் என்றும் இராணுவத்திடம் சரணடையும் போது விடுதலைப்புலிகளுடன் அவருக்கு எந்தவிதத் தொடர்வும் இல்லை என்றார்.
இதன்போது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் விடுதலைப்புலிகள் குடும்பங்களுடன் இணைந்து இராணுவத்தினரிடம் சரணடைந்தனரா? என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
ஆம், என் கணவர் மட்டும் அல்லாது பலர் அவ்வாறு குடும்பங்களுடன் இறுதிக் கட்டத்தில் இணைந்து விட்டனர் என்றார் அந்தப் பெண்.
மேலும் தனது சாட்சியத்தை தொடர்ந்த அந்தப்பெண் இராணுவத்தினரிடம் கையளித்த (ஒப்படைத்த) எனது கணவரை பொறுப்புள்ள, மனிதாபிமான அரசாங்கம் என்றால், மனிதாபிமானமுள்ள இராணுவத்தினர் என்றால் உயிருடன் நான் கையளித்த எனது கணவரை உயிருடன் என்னிடம் மீண்டும் தர வேண்டும்.
எனது கணவரை இராணுவத்தினரிடம் நான் ஒப்படைத்தபோது எங்களையும் அவருடன் கூட்டிச் செல்லுமாறு நான் கேட்டேன். ஆனால் இராணுவத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
விசாரணையின் பின்னர் விட்டுவிடுவதாகவும் கூறிச் சென்றனர். எனது கணவரை இராணுவத்தினர் தனது பேருந்தில் கொண்டு செல்லும் போது அந்தப் பேருந்துக்குள் பலர் இருப்பதை என் கண்களால் கண்டேன்.
இவ்வாறு அந்தப் பெண் கூறிய போது குறுக்கிட்ட ஆணைக்குழுவினர் யாரிடம் உங்கள் கணவரை ஒப்படைத்தீர்கள் என்று அடையாளம் காட்டமுடியுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், இராணுவச் சீருடையில் நின்றவர்களிடம் தான் எனது கணவரைநான் ஒப்படைத்தேன்.
ஆனால் யார் என்று என்னால் அடையாளம் காட்ட முடியாது. அதேவேளை பெயர் மற்றும் அவர்களின் பதவி நிலைகளை அறியக் கூடிய நிலையில் இராணுவத்தினர் இல்லை என்றார்.
இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இராணுவத்தினர் உள்ளனரா? உங்களுக்கு இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா? என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்ப, எனக்கு அம்மா, அப்பாதான் பாதுகாப்பு இராணுவத்தினரின் பாது காப்பை நான் எதிர்பார்க்கவில்லை என்று சட்டென்று பதிலளித்தார்.
<iframe width=”540″ height=”360″ src=”//www.youtube.com/embed/5xkj1_p9fSc?feature=player_embedded” frameborder=”0″ allowfullscreen></iframe>