பண்டமாற்று முறையில் உணவுப் பொருட்களுக்கு பதிலாக தனது 6 வயது மகளை 55 வயதான நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளமையினால், தந்தையை பெண்கள் அடித்து விரட்டும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தை சேர்ந்த ஒருவரால் உழைத்து, சம்பாதித்து தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை.
இதனால், தனது 6 வயது மகளான “ஹாரிபவுல்” என்பவரை அப்பகுதியில் வசித்து வரும் சையத் என்பவருக்கு வர்த்தக ரீதியாக ‘பண்டமாற்று’ முறையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.
தனது மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், ஆடு போன்றவற்றை அந்நபரிடம் இருந்து வாங்கியுள்ளார்.
சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த திருமணம் குறித்து அருகில் வசிப்பவர்கள் காவற்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், அந்த 55 வயது மணமகனையும், சிறுமியின் தந்தையையும் உள்ளூர் பெண்கள் அடித்து உதைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவற்துறை அந்த தந்தையையும், வயதான நபரையும் கைது செய்துள்ளனர்.
தற்போது அச்சிறுமி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.