யாழ்ப்பாணம் – அரியாலை நாயன்மார்கட்டு ராஜவீதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த முதலை ஒன்றை இளைஞர்கள் இன்று பிடித்துள்ளனர்.
அதிகாலை 5 மணியளவில் சுமார் 6 அடி நீளமான முதலை குடியிருப்புக்குள் நுழைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த முதலையை கிளிநொச்சி மாவட்ட வனவள அதிகாரியிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வீட்டினுள் நுழைந்த மலைப்பாம்பு! (வீடியோ)
பொலன்னறுவை, தியசென்புர பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிடித்து வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த மலைப்பாம்பு 8 அடி நீளமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இந்த மலைப்பாம்பை கிரிதல சரணாலயத்தில் விடுவித்துள்ளனர்.
காணொளியில் காண்க:-