யாழ்ப்பாணம் – அரியாலை, நாவலர் வீதியில் இன்று காலை (ஸ்ரான்லி கல்லூரிக்கு அருகில்) மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த படி வாகனம் மோதியதில் குறித்த சிறுவன் கீழே தவறி விழுந்துள்ளார்.
இந்த நிலையில் அவ்வழியால் வந்த மோட்டார் சைக்கிள் தலைமீது ஏறியதால் மரணம் நிகழ்ந்துள்ளதாக அறியப்படுகின்றது.
மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று காலை 8.45 மணியளவில் நாவலர் வீதி கனகரத்தினம் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரூபன் மதுசிகன் (வயது-8) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மூத்த சகோதரனான 12 வயதுச் சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து படி வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
சாரதியை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.