கிரிக்கெட் மைதானத்தில் அரைநிர்வாணத்துடன் இங்கிலாந்து நபர் ஓடிப்பிடித்து விளையாடிய காணொளி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வெளிநாடுகளில் 13 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து வெற்றியை சுவைக்காமல் இதுநாள்வரை இருந்தது.
அதனை உடைத்து முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில், கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்து அணி வென்றது.
போட்டி முடிவுக்கு வந்த தருவாயில் இங்கிலாந்து ரசிகர் ஒருவர் கிரிக்கெட் மைதானத்தில் உள்ளாடையுடன் புகுந்து ஓடினார்.
What’s better the England win or the streaker to finish the Lankans off proper? #SLvENG pic.twitter.com/6MaxXfTGNf
— Matt Wynn (@MatthewWynn8) 9 novembre 2018
இதனைப்பார்த்த பொலிஸார் அவரைத் துரத்தி பிடிக்க முற்பட்டனர். சுமார் 10-க்கும் மேற்பட்டோர் துரத்தியும் கூட அவர்கள் அனைவருக்கும் அந்த நபர் தண்ணி காட்டினார்.
இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக இந்த ஓட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.