ஆண் புடையன் பாம்பொன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி கொத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளையில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை உக்குவரை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவ்விடத்திற்கு வந்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
இவரது மரண விசாரணையில் மேற்படி நபர் மதுபோதையில் இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒரு சோடி புடையன் பாம்பை வேறுபடுத்தி தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்மை அடித்துக் கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் பாம்பு அவரை விரட்டி விரட்டி கொத்தியதாகவும் அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் நிர்வாணப் படம் காட்டியவர் பிணையில் விடுதலை
25-04-2014
பஸ் தரிப்பு நிலையத்தில் நின்று கொண்டிருந்த யுவதி ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியூடாக நிர்வாணப்படத்தைக் காட்டி அவரை அவமதித்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிவான் திலினி கமகே ஒரு இலட்சம் ரூபா செலுத்தி பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் சிறிலால் தேவசிறி பெர்ணாந்து என்பவராவார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரியும் யுவதி கொம்பனித்தெரு பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டை விசாரணைக்கெடுத்த பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இந்த யுவதி கடமை முடிந்து வீடு செல்வதற்காக பஸ்தரிப்பு நிலையத்தில் நின்றவேளை, சந்தேக நபர் அவ்விடத்திற்கு வந்து அவரின் கையடக்கத் தொலைபேசியில் பதியப்பட்டிருந்த நிர்வாணப் படங்களை தன் முகத்திற்கு முன் கொண்டு வந்து காட்சிப்படுத்தி தன்னை அவமதித்ததாக யுவதி முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய நீதிமன்ற பொலிஸ் அதிகாரி எல்.சி.சம்பத் இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.