காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் இதுவரை 350 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பதாகத்சான் பிராந்தியத்தில் உள்ள மலை பகுதியான அர்கோ மாவட்டத்தில் நேற்று காலை 11 மணியளவில் பெய்த மழையில் மலையின் ஒரு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் ஒரு கிராமமே சிக்கிக் கொண்டது. அந்த கிராமத்தில் 2,100 பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100 பேரின் உடல்களை மீட்டிருக்கிறோம். மேலும் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐ.நா.வின் மனிதநேய ஒருங்கிணைப்பு குழுவும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள நூற்றுக்கணக்கான மண் குடிசைகள் இடிந்து விழுந்தன. இப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது என்று பதாகத்சான் பிராந்திய கவர்னரின் செய்தி தொடர்பாளர் நாவீத் போரோடான் கூறினார்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அவசர கால மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படி ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.
காபூல்:ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் இதுவரை 350 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பதாகத்சான் பிராந்தியத்தில் உள்ள மலை பகுதியான அர்கோ மாவட்டத்தில் நேற்று காலை 11 மணியளவில் பெய்த மழையில் மலையின் ஒரு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு கிராமமே சிக்கிக் கொண்டது. அந்த கிராமத்தில் 2,100 பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100 பேரின் உடல்களை மீட்டிருக்கிறோம். மேலும் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐ.நா.வின் மனிதநேய ஒருங்கிணைப்பு குழுவும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள நூற்றுக்கணக்கான மண் குடிசைகள் இடிந்து விழுந்தன. இப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது என்று பதாகத்சான் பிராந்திய கவர்னரின் செய்தி தொடர்பாளர் நாவீத் போரோடான் கூறினார். வடக்கு ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அவசர கால மீட்பு பணிகளை மேற்கொள்ளும்படி ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டுள்ளார்.
– See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=55924#sthash.dxRkxjwT.dpuf