குரங்கு ஒன்று தனது கையடக்க தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக பிரித்தானிய யுவதி ஒருவர் அநுராதபுரம் சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த கைத்தொலைபேசியின் பெறுமதி சுமார் 56 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் எனவும் அதில் தனக்கு தேவையான பெறுமதியான பல ஆவணங்களை சேமித்து வைத்துள்ளதாகவும் அதனை எப்படியாவது தேடித் தரும்படியும் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த யுவதி 26 வயதான பிரித்தானிய பிரஜை எனவும், இவர் அந்நாட்டில் தாதியர் பாட நெறியை பூர்த்தி செய்துகொண்டு பயிற்சிக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தாதியர் பயிற்சியாளராக கடமையாற்றி வருபவரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், யுவதியின் முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எனினும் இதுவரையில் அவரது கைத்தொலைபேசி கிடைக்கப்பெற வில்லையெனவும் அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.