மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கண்ராம் ஸ்ரீனிவாஸ் என்ற ஐடி என்ஜினியர் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
அங்குள்ள டெக் மகேந்திர நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு சுப்ரஜா ஸ்ரீனிவாஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு சிறுமி உள்ளது. நான்கு மாத கைக்குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில், திடீரென தனது நான்கு மாத கைக்குழந்தையுடன் சுப்ரஜா 29 மாடிகள் கொண்ட தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி இறந்த சம்பம் குறித்து தகவல் அறிந்தது விரைந்து வந்த ஸ்ரீனிவாஸ் மனைவியின் உடலை பார்த்து மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுப்ரஜா மற்றும் அவரது கைக்குழந்தையின் உடலை இந்தியா கொண்டுவர அவரது உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.