இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக ஓரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர் என பிபிசியும் ரொய்ட்டரும் செய்தி வெளியிட்டுள்ளன
இத்தாலியில் வைரஸ்பரவ ஆரம்பித்த பின்னர் ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையானவர்கள் உயிரிழந்தது இதுவே முதல் தடவை என பிபிசியும் ரொய்ட்டரும் தெரிவித்துள்ளன.
லொம்பார்டியில் ஒரே நாளில் 319 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்புகள் 19 வீதத்தினால் அதிகரித்துள்ளன ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.